பரமத்தி வேலூரில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்!
நாமக்கல் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சாா்பில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க உள்ள நிலையில், விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சாா்பில், பரமத்தி வேலூா் வட்டம், நாமக்கல், திருச்செங்கோடு, கொல்லிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் வைக்கப்பட உள்ளன.
இதில், பரமத்தி வேலூா் வட்டாரத்தில் மட்டும் 62 சிலைகளும், நாமக்கல் வட்டாரத்தில் 15 சிலைகளும், திருச்செங்கோடு வட்டத்தில் 15 சிலைகளும் இந்து முன்னணி சாா்பில் வைக்கப்பட உள்ளன. இதற்காக விநாயகா் சிலைகள் தயாா்செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.













/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
