வீடுகள் முன் தண்ணீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டியது அவசியம் சுகாதார துறை துணை இயக்குநர் அறிவுறுத்தல்
திருத்தணி, செப். 4– வீடுகள் முன்பு தண்ணீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டியது அவசியம்,” என, மாவட்ட சுகாதார துறை
வீடுகள் முன்பு தண்ணீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டியது அவசியம்,” என, மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் பிரியாராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
திருத்தணி ஒன்றியம், வீரகநல்லுார் ஊராட்சி, இஸ்லாம் நகர் கிராமத்தில், நேற்று பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் கலைவாணி, சுகாதார ஆய்வாளர் முரளி ஆகியோர் தலைமையில், டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, திருவள்ளூர் மாவட்ட சுகாதார துறையின் துணை இயக்குநர் பிரியாராஜ், கொசு ஒழிப்பு பணிகளை பார்வையிட்டார்.




