Health
டெங்கு கொசு ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு, திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, சாந்தி நிகேதன் பள்ளியில் நடந்தது. அதில், டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழித்தல், வீடு மற்றும் பள்ளி சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பராமரித்தல், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுதல் உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
மக்கும், மக்காத குப்பையை தரம் பிரித்தல், குப்பையை பொது இடங்களில் கொட்டாமல் இருத்தல், சுற்றுப்புறத்தை துாய்மையான பராமரித்தல் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. பொள்ளாச்சி நகராட்சி நகர் நல அலுவலர் தாமரைக்கண்ணன், துாய்மை பணி ஆய்வாளர் சிவக்குமார், பரப்புரையாளர்கள் மற்றும் துாய்மை பணி மேற்பார்வையாளர்கள், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.