குண்டும் குழியுமாக மாறிய நாவலுார் –- தாழம்பூர் சாலை
திருப்போரூர், செப். 6– நாவலுார் -– தாழம்பூர் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள்
நாவலுார் -– தாழம்பூர் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருப்போரூர் ஒன்றியத்தில், சென்னை மாநகராட்சியை ஒட்டிய பகுதிகளாக, நாவலுார், தாழம்பூர் ஊராட்சிகள் அமைந்து உள்ளன.
இப்பகுதிகளில், தற்போது ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் பல கல்லுாரிகள் உருவாகி உள்ளன. மக்கள் தொகை, 10 மடங்கு உயர்ந்து, 30 ஆயிரமாக மாறியுள்ளது.




