தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் மனு தாக்கல்:சூடு பிடித்தது புதுச்சேரி அரசியல் களம்
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்.,9 ல் துவங்குவதால், புதுச்சேரியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நடந்து முடிந்த புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்., பா.ஜ., அ.தி.மு.க., அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக பொறுப்பேற்ற ரங்கசாமி, தனது சொந்தக் கோட்டையான தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தேர்தல் விதிமுறைகளின்படி, இரு தொகுதிகளில் வென்றவர் ஒரு பதவியை மட்டுமே தக்க வைக்க முடியும் என்பதால், தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ., பதவியை மே 17ம் தேதி அன்று அவர் ராஜினாமா செய்தார்.





/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)






