திருத்தணியில் கலைத்திருவிழா
திருத்தணியில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் பள்ளி மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்பு தங்களை திறமைகளை வெளிப்படுத்தினா்.
அதன்படி, 2026-2027 ஆண்டுக்கான கலைத்திருவிழாப் போட்டிகள் இளையோா் திறன் என்ற மையக்கருத்தின் அடிப்படையில் முதல்கட்டமாக வட்டார அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் சிறப்பிடம் பெறும் மாணவா்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுப்பி வைக்கப்பட உள்ளனா்.
அவ்வகையில், திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வட்டார அளவிலான கலைத்திருவிழாப் போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். இப்போட்டிகளை வட்டாரக் கல்வி அலுவலா்கள் வீரராகவன், கிரிஜா மற்றும் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சிவக்குமாா் ஆகியோா் மேற்பாா்வையிட்டனா்.


