கி.கிரி சாலையோர வியாபாரிகள் வங்கி கடன் பெற சிறப்பு முகாம்
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரியில், சாலையோர வியாபாரிக-ளுக்கு, கடன் வழங்கும் சிறப்பு முகாம் நேற்று (செப். 3-) துவங்கி வரும், 30-ம் தேதி வரை
நடக்கிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷ்னர் சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரம் மற்றும் மிதிவண்டியில் வியா-பாரம் செய்வோர், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் கூடைகளில் சுமந்து வீதி வீதியாக பொருட்களை விற்பனை செய்யும் சிறு வியாபா-ரிகளுக்கு, மத்திய அரசின் பி.எம்., ஸ்வநிதி திட்-டத்தில், வங்கிக்கடன் உதவி பெற சிறப்பு முகாம் நடக்கிறது. இத்திட்டத்தில் தகுதியுள்ள வியாபா-ரிகளுக்கு, முதல் தவணையாக, 15,000 ரூபாய், 2-ம் தவணையாக, 25,000 ரூபாய், 3-ம் தவணையாக, 50,000 ரூபாய் வரை, வங்கிகள் மூலம் பிணை-யில்லா தொழிற்கடன் வழங்க, நகராட்சி நிர்வா-கத்தால் விண்ணப்பிக்கலாம். இச்சிறப்பு கடன் மேளா நேற்று (செப்.3-) துவங்கி வரும், 30-ம் தேதி வரை நடக்கிறது.


