சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் சுவநிதி திட்டத்தில் கடனுதவி வழங்கல்

நாமக்கல்:நாமக்கல்லில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு, பிரதமரின் சுவநிதி திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டது.
நகர் பகுதிகளில் சாலையோர வியாபாரம், சிறு வியாபாரம் மற்றும்
தெருவோர வியாபாரிகள் பலர், மத்திய அரசின், 'பிரதமர் சுவநிதி'
திட்டத்தில் கடனுதவி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து,
'பிரதமரின் சுவநிதி' திட்டம் சார்பில், நாமக்கல் மாநகராட்சி
அலுவலகத்தில் நடந்த கடனுதவி வழங்கும் நிழ்ச்சிக்கு, மாநகராட்சி
கமிஷனர் செல்வபாலாஜி தலைமை வகித்தார். மாவட்ட முன்னோடி வங்கி முதன்மை
மேலாளர் சரவணன் பங்கேற்று, மேற்படி திட்டகளின் கீழ்
தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான தெருவோர வியாபாரிகளுக்கும்
அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும், தகுதியின் அடிப்படையில்
பல்வேறு சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்ட பயன்கள் கிடைக்க வழிவகை
செய்யும் வகையில் தகுதிபெற்ற வியாபாரிகளுக்கு முதல் தவணை, 15,000
ரூபாயும், இரண்டாம் தவணை, 25,000 ரூபாயும், மூன்றாம் தவணை, 50,000
ரூபாயும், கிரெடிட் கார்டும் என, 35 பேருக்கு, 9.65 லட்சம் ரூபாய்
வழங்கப்பட்டது.
இந்த முகாம் தொடந்து, செப்., 30 வரை நடைபெறும் என, அலுவலர்கள் தெரிவித்தனர்.