கச்சா எண்ணெய், வட்டி விகித உயர்வு அச்சம் எதிரொலி: சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!
சென்செக்ஸ் 777.94 புள்ளிகள் சரிந்து 74,003.82 புள்ளிகளாகவும், நிஃப்டி 279.50 புள்ளிகள் சதவீதம் சரிந்து 23,118.60 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: உயர்ந்து வரும் எண்ணெய் விலை, அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய சந்தையில் நிலவும் பலவீனமான போக்கு ஆகியவற்றின் மத்தியில், சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிந்த நிலையில், நிஃப்டி குறியீடு, ஐந்து மாத சரிவில் நிறைவடைந்தது முதலீட்டாளர்களை அச்சத்தில் மூழ்கியது.
இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் உயர்வாகத் தொடங்கிய போதிலும், விற்பனை வேகம் அதிகரித்ததால் காலை நேர வர்த்தகத்தின் பிற்பகுதியில் அதன் வேகம் தணிந்தது. வர்தக முடிவில், வங்கி, ஆட்டோ மற்றும் எண்ணெய் & எரிவாயு பங்குகளில் ஏற்பட்ட சரிவால் சென்செக்ஸ் 777.94 புள்ளிகள் சரிந்து, மூன்று மாதங்களில் இல்லாத அளவு குறைந்தபட்ச அளவான 74,003.82 புள்ளிகளாகவும், நிஃப்டி 279.50 புள்ளிகள் சதவீதம் சரிந்து 23,118.60 புள்ளிகளாக நிலைபெற்றது.






/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

