திருப்புட்குழி தொடக்க பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
பள்ளி மேலாண்மை குழு என்பது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மேம்பாட்டிற்காகவும், செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் உருவாக்கப்படும் உள்ளூர் குழு.
நேற்று நடந்த இக்குழு கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பா தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜி.செல்வகுமார் வரவேற்றார். இக்கூட்டத்தில் புதிய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.



