Politics
அரசு பள்ளியில் மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள் தேர்வு

கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், ஆனே-கொள்ளு பஞ்., உட்பட்ட தொட்டபேளூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மற்றும் பள்ளி மறு-கட்டமைப்பு சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் சேட்டு முன்னிலை வகித்தார். கூட்-டத்தில், 2026 - 2028ம் ஆண்டிற்கான புதிய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி தலைவராக தேவிகா மற்றும் குழு உறுப்பினர்களாக, 23 பேர் தேர்வாகினர். தேர்வு செய்யப்பட்ட அனைத்து உறுப்பி-னர்களுக்கும், அரசு வழங்கிய சான்றிதழ்களை, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சேட்டு வழங்கினார். ஏற்பாடுகளை, பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசுலு செய்திருந்தார்.