டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழை டிஜிட்டல் முறையில் வழங்கும் திட்டத்தை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பொதுமக்களே பதிவிறக்கம் செய்துகொள்ளும் நடைமுறை செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் செப்டம்பர் 2-ஆம் தேதி அறிவித்திருந்தார். அன்றைய தினமே, அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும், மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கும் போக்குவரத்து ஆணையர் கடிதம் அனுப்பியிருந்தார்.
அதில், செப்டம்பர் 12-ஆம தேதி முதல், ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்று உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும், டிஜிட்டல் முறையில் அனுப்ப வேண்டும் எனவும், சான்றிதழ்களை விண்ணப்பதாரர்களுக்கு அச்சிட்டு அனுப்பும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.







