ரூ.5 யாருக்கு? -கோவில்களில் வசூல் வேட்டை!
உயர்நீதிமன்ற உத்தரவை முழுமையாகச் செயல்படுத்தும் பொருட்டு 1.9.2026 முதல் கைபேசி தடை விதிமுறைகள் 52 திருக்கோவில்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது அறநிலையத்துறை.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருத்தணி முருகன் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ் வரர் கோவில் உள்ளிட்ட 52 கோவில்களில் பக்தர்கள் செல்போன் பேச தடைவிதித்துள்ளது த.வெ.க. அரசின் அறநிலையத்துறை. கோவிலின் புனிதத் தன்மை, ஆன்மிக அமைதியைப் பாதுகாக்கவும், பக்தர்களின் கவனச் சிதறலைக் குறைக்கவும் செல்போன் தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும், மேற்கண்ட நடை முறையைச் செயல்படுத்த பக்தர்கள் செல்போனை எடுத்துச்செல்லாமல் திருக் கோவிலின் முன்பகுதிகளில் கவுண்டர்களில் செல் போனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்.
அதுபோக, இத்திட்டத்தை புதிதாக நாங்கள் கொண்டுவரவில்லை. ஏற்கனவே, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை இருக்கையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல நீதிப் பேராணை மனுவில் வழங்கப்பட்ட உத்தரவின் படி திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் 14.11.2022 முதல் கைபேசி பயன்பாட்டுக்கு தடை நடைமுறையில் இருக்கின்றது. இந்த உத்தரவினை முழுமையாக செயல்படுத்தும் பொருட்டு 1.9.2026 முதல் கைபேசி தடை விதிமுறைகள் 52 திருக்கோவில்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)








