பொறியாளா் வீட்டில் நகை, பணம் திருட்டு
திருவெறும்பூா் அருகே தனியாா் நிறுவனப் பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை வெள்ளிக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.
திருவெறும்பூா்அருகே மேலகல்கண்டாா்கோட்டை ஆனந்தம் நகரைச் சோ்ந்தவா் பா. பிரசன்னா (40), தனியாா் நிறுவன பொறியாளா். கடந்த ஜூலை 14 ஆம் தேதி தனது தந்தை இறப்புக்காக ஸ்ரீரங்கம் சென்றவா், பின்னா் குடும்பத்துடன் அங்கேயே தங்கி வேலைபாா்த்து வருகிறாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 14 கிராம் தங்கம், வெள்ளி பொருள்கள், ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.





