Politics
KN நேரு வீட்டில் சோதனை: "நேருவைப் பழிவாங்க பார்க்கிறார்கள்; பணிந்து போகாது திமுக" - கனிமொழி
நேருவை பழிவாங்கும் நோக்கில் சோதனை நடத்தப்படுவதாக கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். மிரட்டல்களுக்கும் சோதனைகளுக்கும் திமுக அஞ்சாது என்றும் கூறியுள்ளார்.|Kanimozhi condemned DVAC searches linked to KN Nehru, accusing the TVK government of political vendetta and misuse of power.

கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறும் நிலையில், கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ-வுமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.
இந்தச் சோதனைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.
தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் கட்டணப் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
"சட்டமன்றத்தில் தி.மு.கழகத்தை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், தொடர்ந்து அவதூறுகளையும் திசைதிருப்பல் நாடகங்களையும் அரங்கேற்றி வந்த தவெக அரசு,
தற்போது காழ்ப்புணர்ச்சியின் உச்சத்திற்கே சென்று, கழக முதன்மைச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான திரு.நேரு அவர்களைப் பழிவாங்கப் பார்க்கிறது.
மிரட்டல்களுக்கும் சோதனைகளுக்கும் பணிந்து போகும் இயக்கம் தி.மு.கழகம் அல்ல. எதிர்க்கட்சியின் குரல்வளையை நெரிப்பதற்காக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் இந்த ஜனநாயக விரோத தவெக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து தி.மு.கழகம் ஒருபோதும் அஞ்சாது".
