செயல்திறன் அரசியல்!
வரும் 2029ல் நடக்கும் லோக்சபா தேர்தலுக்கு முன், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ள, 21 மாநிலங்களில் யு.சி.சி., எனப்படும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். ஊழல், வாரிசு அரசியலால் பாதித்திருந்த நம் நாட்டை, செயல்திறன் சார்ந்த அரசியலை நோக்கி இந்த அரசு நகர்த்தியுள்ளது. அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
ஆதிக்கத்திற்கு முடிவு!
'பிரிக்ஸ்' கூட்டமைப்பு, இதுவரை முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கமாக செயல்பட்டு வந்தது. தற்போது, இந்த அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் முதலாளித்துவ ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இது தொடர்பான தீர்மானத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டாலும், அவர் தன் நடவடிக்கைகளை தொடர்வார். எம்.ஏ. பேபி பொதுச் செயலர், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)






