ஊழல் முறைகேடு புகார்; தாம்பரம் மாநகராட்சி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.
ரூ. 45 லட்சம் வரை தாம்பரம் மாநகராட்சியில் முறைகேடு நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில், அம்மாநகராட்சியின் ஆணையர் பாலச்சந்திரனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சியில் சுமார் ரூ. 45 லட்சம் மதிப்பிலான இரண்டு பணிகளில், டெண்டர் முடிவதற்கு முன்பே பணி முடிந்து திறப்பு விழா நடந்ததாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டி ஆதாரங்களை வெளியிட்டது.




/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)





