ரூ.25,000: பி.எப்.,க்கான சம்பள வரம்பு உயர்வு : நிறுவனம், ஊழியர்களின் பங்களிப்புத்தொகை கூடும்
புதுடில்லி: பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டத்துக்கு தகுதியான சம்பள மாத சம்பள வரம்பு 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் மாதாந்திர பி.எப்., பங்களிப்பு 3,000 ரூபாயாக அதிகரிக்கும். நிறுவனமும் அதே அளவு பங்களிப்பு செய்ய வேண்டியிருக்கும்.
பி.எப்., திட்டத்தில் இதுவரை, புதிதாக வேலைக்கு சேருவோரின் அடிப்படை சம்பளம் 15,000 ரூபாய் வரை உள்ளவர்களுக்கே கட்டாய சமூக பாதுகாப்பு பொருந்தியது. அதற்கு மேல் சம்பளம் பெற்று புதிதாக சேருபவர்களை நிறுவனங்கள் கட்டாயமாக பி.எப்.,-க்குள் சேர்க்க வேண்டியதில்லை.
அப்படியே சேர்க்கப்பட்டு அவர்களின் சம்பளம் 1 லட்சம் ரூபாயாக இருந்தாலும், 15,000 ரூபாய் வரம்பை பின்பற்றி ஊழியர் மற்றும் நிறுவனம் தலா 1,800 பங்களிப்பு செலுத்தினால் போதும். கடந்த 2014 செப்டம்பரில் முதல் இந்த நிலையே தொடர்கிறது.










/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
