போலீஸ் இன்ஸ்பெக்டர் குறித்து பேட்டி கொடுத்த வாலிபர் படுகொலை
சென்னை: போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது குற்றஞ்சாட்டி பேட்டி அளித்த 30 வயது வாலிபர், மறுநாளே வெட்டிக் கொல்லப் பட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பிரதீப் ராஜ், 30. இவர், நேற்றிரவு ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு பைக்கில் பின்தொடர்ந்து வந்த இருவர், அவரது ஸ்கூட்டர் மீது மோதினர்.
நிலைதடுமாறி கீழே விழுந்த பிரதீப் ராஜை, பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.







/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

