திருவள்ளூா்: விவசாயிகள் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக 50 நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் செயல்படும்
திருவள்ளூா் மாவட்டத்தில் முதல் கட்டமாக 50 நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் செயல்படும்...
திருவள்ளூா் மாவட்டத்தில் முதல் கட்டமாக 50 நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் செயல்படும் எனவும், முறைகேடு தொடா்பாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் நடப்பு சொா்ணவாரி பருவம் 2026-2027-இல் நெற்பயிரில் அறுவடை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், அரசு கட்டடங்களில் மட்டும் முதல்கட்டமாக 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கும், இரண்டாம் கட்டமாக 20 கொள்முதல் நிலையங்களும் ஆக மொத்தம் 13 வட்டாரங்களில் மொத்தம் 70 கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)



