மடத்துக்குளத்தில் விளை பொருட்கள் ஏலம் கொப்பரை கிலோ 160.15க்கு விற்பனை
உடுமலை: மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்தில், கிலோ ரூ.54.25க்கும், கொப்பரை ஏலத்தில், கிலோ ரூ.160.15க்கும் விற்பனையானது.
மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ–நாம் திட்டத்தின் கீழ், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் நடந்த ஏலத்திற்கு, 2,623 கிலோ எடையுள்ள, 5,420 தேங்காய்களை, 30 விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.



