கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல்
திருவள்ளூர்: திருவள்ளூர் பழைய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள நீர்வளத்துறை துறை கட்டுப்பாட்டில் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளதால், மழைக்காலத்தில் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட டோல்கேட், கலெக்டர் அலுவலகம் பகுதியில் இருந்து, சி.வி.நாயுடு சாலை, தெற்கு குளக்கரை சாலை வழியாக, பழைய பேருந்து நிலையம் பின்புறம் நீர்வளத்துறை துறை கட்டுப்பாட்டில் உள்ள கால்வாய் செல்கிறது.
மேற்கண்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், இக்கால்வாய் வழியாக காக்களூர் ஏரிக்கு செல்லும் வகையில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கால்வாயை முறையாக பராமரிக்காததால், சில இடங்களில் ஆக்கிரமிப்பால் கால்வாய் சுருங்கியுள்ளது.


