மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
விழுப்புரம்: திண்டிவனத்தில் மின்சாரம் தாக்கியதில் ஓட்டல் தொழிலாளி இறந்தார்.
திண்டிவனம் அடுத்த சலவாதியை சேர்ந்த முருகேசன் மகன் ஏழுமலை, 22; ஓட்டல் தொழிலாளி. இவர், கடந்த மாதம் 8ம் தேதி, மரக்காணம் சாலை இந்திரா நகர் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்றார்.
அப்போது, அந்த வீட்டின் மாடி அருகில் சென்றபோது, அங்கிருந்த உயர் அழுத்த மின் கம்பி ஏழுமலை மீது பட்டு மின்சாரம் தாக்கியது.








