காய்கறி விலை கிடுகிடு உயர்வு இல்லத்தரசிகள் அதிருப்தி
சென்னை, செப். 15– காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகள் அதிருப்தி அடைந்து
காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இவை மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை. எனவே, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு காய்கறிகள் எடுத்து வரப்படுகின்றன. பெரிய வெங்காயம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தும், உருளை கிழக்கு உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களில் இருந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாகவே காய்கறிகளின் விலை உச்சத்தில் உள்ளது. சில்லறை விலையில் பல வகை காய்கறிகள் கிலோ 70 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.






