Politics
பேச்சு, பேட்டி, அறிக்கை
காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் பேட்டி:முதல்வர் விஜய் நல்லாட்சி நடத்தி வருகிறார்; அவர்

காங்கிரஸ் தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் பேட்டி:
'முதல்வர் விஜயின் நல்லாட்சியை தமிழகத்தோட முடிச்சுக்கணும்... இந்திய அளவில் நல்லாட்சி தர நினைக்கக்கூடாது'ன்னு, சுத்திவளைச்சு சொல்றீங்களோ?
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேட்டி:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது, ஊழல் வழக்கு தொடர்ந்து, அவரை சிறையில் தள்ளியதாக, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தேவையின்றி விமர்சனம் செய்துள்ளார். அவருக்கு, 'பெட்டிஷன்' போடுவதும், 'கேஸ்' போடுவதும் தான் வேலை; அதற்காகவே அவரை தி.மு.க.,வில் வைத்துள்ளனர். பாரதி எப்போதும் பொய்யை தவிர வேறு எதையும் பேசியதில்லை.
'தி.மு.க., - அ.தி.மு.க., இடையே ரகசிய கூட்டணி இருக்கு'ன்னு, த.வெ.க.,வினர் குற்றஞ்சாட்டுறாங்களே... அப்படி எல்லாம் இல்லன்னு காட்டிக்க, ஆர்.எஸ்.பாரதி இப்படி எல்லாம் பேசுறாரோ?
தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலருமான மயிலை வேலு அறிக்கை: வளர்ச்சி திட்டங்கள் என்பது, ஆட்சி மாறும்போது ரத்து செய்யப்படும் அரசியல் அறிவிப்புகள் அல்ல; மக்களின் வரிப்பணத்தில் உருவாகும் எதிர்கால முதலீடு கள். ஏற்கனவே திட்டமிடப்பட்ட பணிகளை ரத்து செய்து விட்டு, புதிய அறிவிப்புகளை வெளி யிடுவது வளர்ச்சி அல்ல; நிர் வாக திறமையற்ற, நிலையற்ற தன்மையின் வெளிப்பாடு.
கடந்த 2021ல் நீங்க ஆட்சிக்கு வந்தப்ப, அ.தி.மு.க., அரசின் தாலிக்கு தங்கம், மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் திட்டங்களை எல்லாம் ரத்து பண்ணியதை மறந்துட்டீங்களா?
த.மா.கா., பொதுச்செயலர் ஜி.ஆர்.வெங்கடேஷ் பேச்சு:
'கடந்த 1996ல் மூப்பனாரை தேடி பிரதமர் பதவி வந்தப்ப, அதை தடுத்தது தி.மு.க., தான்'னு ஒரு குற்றச்சாட்டு இருக்கே... அது உண்மையா, இல்லையான்னும் இவர் சொல்லியிருக்கலாமே!