விநாயகர் சிலை விசர்ஜனம் நாளை போக்குவரத்து மாற்றம்
கோவை: மாநகரில் நாளை விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் விசர்ஜனம் முன்னிட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாநகரில் நாளை மதியம் 12 மணி முதல் விநாயகர் சிலை விசர்ஜனம் தொடங்குகிறது. முடியும் வரை போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும்.
காலை 8 முதல் இரவு 10 மணி வரை மாநகரில் கனரக, சரக்கு வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் வரும் கனரக வாகனங்கள், எல்.அண்டு.டி. பைபாஸ், ஈச்சனாரி சர்வீஸ் ரோடு வழியாக வந்து விநாயகர் கோவில் முன் யு–டர்ன் செய்து, செட்டிபாளையம் ரோடு வழியாக போத்தனுார் கடைவீதி, நஞ்சுண்டாபுரம் சாலை, ராமநாதபுரம் வழியாகவும், குறிச்சி பிரிவு ஆத்துப்பாலம் வழியாகவும் உக்கடம் அடையலாம்.





