4 நாள் சரிவுக்குப் பிறகு பங்குச்சந்தை ஏற்றம்! சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...
தொடர்ந்து 4 நாள்கள் சரிவுக்குப் பிறகு இந்திய பங்குச்சந்தைகள் இன்று (செப். 4) உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,657.02 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 673.15 புள்ளிகள் உயர்ந்து 76,826.58 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 113.80 புள்ளிகள் அதிகரித்து 23,987.25 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.


