Economy, business and finance
பதற்றப்படும் அளவுக்கான சரிவு அல்ல புதிய உச்சம் தொடவும் வாய்ப்பு உள்ளது: நிப்டி குறித்து எக்சிஸ் நிறுவனம் கணிப்பு

பொருளாதாரத்தின் அடிப்படை அம்சங்களும், நிறுவனங்களின் காலாண்டுமுடிவுகளும் சாதகமாக இருந்தபோதிலும் இந்திய பங்கு சந்தையில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் சரிவு பாதை தொடர்கிறது.
கடந்த 25 வர்த்தக தினங்களில் மட்டும் 'நிப்டி 50' கிட்டத்தட்ட 1,000 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களை கலக்கமடைய செய்துள்ளது.
நேற்றைய வர்த்தகத்திலும் நிப்டி 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 23,800 புள்ளிகளுக்கு கீழ் இறங்கியது. சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 76,200 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமானது. பேங்க் நிப்டி அரை சதவீதத்திற்கும் மேல் சரிந்து 57,000 என்ற நிலைக்கு இறங்கியது. பார்மா துறையை தவிர ஐ.டி., மீடியா, மெட்டல், வங்கி என அனைத்தும் சரிவை சந்தித்தன.
1 அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, முதலீட்டாளர்களின் சென்டிமென்ட்டை பாதித்துள்ளது
2 நடப்பு வாரத்தில் மட்டும் 11 மெயின்போர்டு ஐ.பி.ஓ.,க்கள் களமிறங்குகின்றன. மேலும் என்.எஸ்.இ., மற்றும் ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஆகிய மெகா ஐ.பி.ஓ.,க்களும் வரவுள்ளன. இதனால், முதலீட்டாளர்களின் கவனம் மற்றும் சந் தையின் பணப்புழக்கம் இரண்டாம் நிலை சந்தையிலிருந்து ஐ.பி.ஓ., பக்கம் திரும்பியுள்ளது
3 அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தரவுகள் சிறப்பாக வந்ததை தொடர்ந்து, அங்கு வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இந்திய சந்தைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
