டி.என்.சி.ஏ., மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி
திண்டுக்கல்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையே 23 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி செப்.,1ல் எட்டு மாவட்டங்களில் துவங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆர்.வி.எஸ்., மற்றும் ஸ்ரீவீ., கல்லுாரி மைதானங்களில் போட்டிகள் நடக்கிறது.
முதல் சுற்று போட்டி முடிவுகள் நீலகிரீஸ் அணி 44.5 ஓவர்களில் 143 ரன்கள் (ஜீவபாரதி 41, நியூகின்நலராஜ் 6 விக்கெட்டுகள்) எடுத்து 'ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய துாத்துக்குடி அணி 32 ஓவர்களில் 144/8 ரன்கள் (ஹரிசங்கர் 58, ரிஷாப்ராஜ் 6 விக்கெட்டுகள்) எடுத்து வெற்றி பெற்றது.
தஞ்சாவூர் அணி 34.1 ஓவர்களில் 100 ரன்கள் (ஜெயந்த் 6 விக்கெட்டுகள்) எடுத்தது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் அணி 10 ஓவர்களில் 106/1 ரன்கள் (ஸ்ரீமுகேஸ்வரன் 72, நாட் அவுட், சஞ்சய் வெங்கடேஷ்வர் 26, நாட் அவுட்) எடுத்து வெற்றி பெற்றது.








