அத்திவாக்கத்தில் மக்கள் தொடர்பு முகாம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாலுகாவிற்குட்பட்ட அத்திவாக்கம் கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று நடைபெறுவதாக, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வருவாய் துறை சார்பில், பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டு, அவற்றுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், கலெக்டர் தலைமையில் மாதந்தோறும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது.



