நீலகிரியில் திடீர் கனமழை... மண் குளிர்ந்ததால் மனமகிழ்ந்த விவசாயிகள்..!
நீலகிரி மாவட்டத்தில் யாரும் எதிர்பாராத விதமாக இன்று 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம், உலக அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. மேலும், இது மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் கருதப்படுகிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எல் நிநோ தாக்கத்தால் போதுமான மழைப்பொழிவு இல்லாமல் வறட்சி நிலவி வந்தது. நீலகிரி மலை மாவட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல.



