பட்டியல் சமூகத்தினர் எடுத்துவந்த விநாயகர் சிலைக்கு எதிர்ப்பு-பரங்கிப்பேட்டையில் பரபரப்பு
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் கிராமத்தில் ஊரின் பிரதான சாலையில் பட்டியல் சமூக மக்கள் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பிரதான கடலூர் சாலையில் சிலையை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரிக்குப்பம் கிராமத்தில் பிரதான சாலை வழியாக பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த செப்.13-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் கடலூரில் இருந்து விநாயகர் சிலை வாங்கி வாகனத்தில் கொண்டு வந்துள்ளனர்.
அப்போது, சிலையை கிராமத்தின் பிரதான சாலை வழியாக எடுத்துச் செல்லக் கூடாது என அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் சிலையுடன் வந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததால், வேறு வழியாக சிலையை எடுத்துச் சென்றதாக தெரிகிறது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

