பைக் மீது லாரி மோதல்: திருச்சியை சோ்ந்தவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் லாரி மோதியதில் பைக்கில் சென்ற திருச்சியைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா்.
திருச்சி, உறையூா் பங்காளித் தெருவைச் சோ்ந்தவா் உ.அகமது அன்சாரி (45). இவா், சென்னையிலிருந்து வியாழக்கிழமை மாலை பைக்கில் புறப்பட்டு, திருச்சிக்குச் சென்று கொண்டிருந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், முண்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை இரவு அகமது அன்சாரி வந்த போது, அப்பகுதியில் வந்த டேங்கா் லாரி பைக் மீது மோதியது.









