வெளிநாடுகளில் படிக்க உதவித்தொகை விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
உடுமலை: வெளிநாட்டில் முதுகலை கல்வி கற்கும் முஸ்லிம் சிறுபான்மையின மாணவ, மாணவியர் தமிழக அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிக்கை:
முஸ்லிம் சிறுபான்மையின மாணவ, மாணவியர் 10 பேருக்கு, வெளிநாடு சென்று முதுகலை படிக்க, ஒரு மாணவருக்கு அதிகபட்சம் தலா, 36 லட்சம் ரூபாய் வீதம் தமிழக அரசு உதவித்தொகை வழங்க உள்ளது. 2026–27ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.



