Politics
”திமுக ஆட்சியில் 7.5 முதல் 10% வரை லஞ்சம் என ED அறிக்கை...” - பேரவையில் CM விஜய் ஆவேசம்!

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான பதிலுரையில் பேசிய முதலமைச்சர் விஜய் திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டப்பேரவை கூடியது. அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தனி நபர் தீர்மானத்திற்கு அனுமதி கோரி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் கொடுத்தார். ஆனால், முதலமைச்சரின் பதிலுரைக்கு பிறகு தான் தனித்தீர்மானம் என சபாநாயகர் கூறியதால், திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரையில் பேசிய முதலமைச்சர் விஜய் சட்டம் ஒழுங்கு குறித்து பதிலளித்தார். அதில், "குற்றத்தை பார்க்கும் பார்வையில் மாற்றம் வேண்டும். குற்றம் நடந்துவிட்டது என்பதால் மட்டுமே, ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது எனக் கூறிவிட முடியாது. தனிப்பட்ட குற்ற சம்பவங்களுக்கும் மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கிற்கும் வேறுபாடு உள்ளது.
தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து பேச வேண்டாம். மக்கள் எனக்கு கொடுத்துள்ள இடம் இது சாத்தியமானதற்கு காரணம் பெண்கள் தான். பெண்கள் குறித்து யாராவது அவதூறாக அசிங்கமாக பேசினால் சட்டம் தனது கடமையை செய்யும். அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பேசுகிறார் என நினைத்தால், அதற்கு நான் பொறுப்பாக முடியாது. சமீபகாலமாக தமிழ்நாட்டில் ஆபாச நதி, வன்ம நதியாய் ஓடிட்டு இருக்கு.
எட்டு கோடி பேரின் அடையாளமாக, 8 கோடி மக்களின் சொந்தமாக இந்த அரசு இருக்கும். மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்வோம்.. தமிழக மக்கள் நலம் ஒன்றை கருத்தில் கொள்வோம். மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாவை கூட தொட மாட்டோம். தொட்டவர்களையும் விடமாட்டோம் என ஏற்கனவே கூறியுள்ளோம்.
மூன்று பைல்களில் ஒரு சில சாம்பிள் பார்க்கலாமா? அமலாக்கத்துறை அனுப்பிய ஆவணத்தில், 16 கோடிக்கும் அதிகம்னு எஸ்டிமேட்டா 16 கோடிக்கு 2% தான் 40 லட்சம் ரூபாய் கமிஷனா வரும்னு கணக்கு. இந்த கணக்கு விசாரணை கமிஷன் அறிக்கை தான் இருக்கு. 2001ல் இதே அவையில் முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா மேடமும் இதே சர்க்காரியா விசாரணை கமிஷன் அறிக்கை பற்றி பேசி இருக்கிறார்கள். அவருடைய மருமகன் பொருள்சாத்தம் பேரும் அடிப்பட்டுச்சு. 50 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயத்தை 25 வருஷத்துக்கு முன்னாடி இதே சபையில் எடுத்தோம். அப்பதான் எல்லா கூத்து வெளிய வர ஆரம்பிச்சது. அப்படி பார்த்தா அந்த அறிக்கை வந்து பொன்விழா ஆண்டே வந்திருக்கு.
கலைஞர் மீது எனக்கு பெரிய மதிப்பு மரியாதை உண்டு. நான் அவர் மீது எந்த குற்றச்சாட்டையும் வைக்கவில்லை, அறிக்கையில் இருப்பதை தான் சொல்கிறேன். லோனுக்கு இஎம்ஐ கட்டுற மாதிரி இன்ஸ்டால்மெண்ட்டில் வாங்கி இருக்காங்க. இந்த 29 லட்சம் மட்டும் இல்ல இந்த முரசொலி கட்டிடம் சொல்லி அதை கட்டியதற்காக எல்லாம் கொடுத்திருக்காங்க. காசா கொடுத்திருக்காங்க, பொருளாக வாங்கி கொடுத்திருக்காங்க. கலைஞர் அவர் பெயரை மென்ஷன் பண்ணதாக கூறி அதற்கு தான் மன்னிப்பு கூறினேன்.
முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் லஞ்சம் பெற்றனர் என்பது அமலாக்கத் துறை அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கு. திமுக ஆட்சியில் ஒப்பந்தங்களுக்கு 7.5 முதல் 10% வரை லஞ்சம் பெறப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை சுட்டிக்காட்டியுள்ளது." என்று பேசினார்.





/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
