Politics
காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கம்.. தொடக்க விழா தேதி மாற்றம்!

முதலமைச்சர் விஜய் நாளை தொடங்கி வைப்பதாக இருந்த காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தின் தொடக்க விழா, வரும் 22ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை காமராஜர் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழாவை முதலமைச்சர் விஜய் வரும் 22ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் காரணமாக 2 மாவட்டங்களுக்கு விலக்கு
இடைத்தேர்தல் காரணமாக செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களைத் தவிர்த்து, தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
