Politics
காலை உணவுத்திட்ட பெயர் பலகை ஒன்றிய நிதி மூலம் மாற்ற கோரிக்கை
நாமக்கல்:அரசு பள்ளிகளில் உள்ள, தமிழக அரசின் காலை உணவுத்திட்ட பெயர் பலகையை, ஒன்றிய நிதி மூலம் மாற்ற
பள்ளிகளில் உள்ள, தமிழக அரசின் காலை உணவுத்திட்ட பெயர் பலகையை,
ஒன்றிய நிதி மூலம் மாற்ற வேண்டும்' என, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்ற, நாமக்கல் மாவட்ட செயலாளர் சங்கர், தமிழக அரசின் ஊரக
வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் கமிஷனருக்கு மனு அனுப்பி
உள்ளார்.
இதுகுறித்து, அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
அரசு பள்ளிகளில் ஏற்கனவே இருந்த, முதல்வர் காலை
உணவுத்திட்டத்திற்கு, 'பெருந்தலைவர் காமராஜர்' காலை உணவுத்திட்டம்
என, தமிழக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இத்திட்டத்திற்காக,
ஏற்கனவே அனைத்து பள்ளிகளிலும் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளை
மாற்றி, 'பெருந்தலைவர் காமராஜர்' காலை உணவு திட்டம், எனும் திட்ட பெயர்
பலகை வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பெயர் பலகையை,
ஊரக வளர்ச்சித்துறை மூலமாக, ஒன்றிய பொது நிதியிலிருந்து
பள்ளிகளில் நிறுவ வேண்டும். இதற்கு, துறை மூலம் மாவட்ட
கலெக்டர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.