Politics
முதலமைச்சர் விஜய் மீது உரிமை மீறல் புகார்: சபாநாயகரிடம் திமுக மனு!

சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரிடம் முதலமைச்சர் விஜய் மீது திமுக துணை கொறடா கோவி.செழியன், அவை உரிமை மீறல் புகார் அளித்தார்.
திமுக துணை கொறடா கோவி.செழியன் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை சந்தித்து முதலமைச்சர் விஜய் மீது அவை உரிமை மீறல் புகார் அளித்துள்ளார்.
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரையாற்றிய முதலமைச்சர் விஜய், திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதையடுத்து இன்றைய பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, சர்க்காரியா குழு தொடர்பாகவும், நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டை ஆதாரமாகக் கொண்டும் முதலமைச்சர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இருப்பினும் முதலமைச்சர் விஜய் பேசியதில் இருந்து எந்த பகுதியையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் அவையின் மையப்பகுதிக்கு வந்து சபாநாயகர் முன்பு முழக்கங்களை எழுப்பினர். அப்போது பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், சட்டப்பேரவைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடும் திமுகவினரை அவையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். திமுகவினர் இருக்கைக்கு சென்று அமருமாறு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால், திமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவையில் இருந்து அவர்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உத்தரவிட்டார். இதனையடுத்து திமுகவினரை காவலர்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.





/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
