Religion
விநாயகர் சதுர்த்தியில் அனுமதித்த இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்கணும்: கலெக்டர்
நாமக்கல்:விநாயகர் சதுர்த்தியின்போது, அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என,
சதுர்த்தியின்போது, அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை
கரைக்க வேண்டும்' என, கலெக்டர் மதுபாலன் கூறினார்.
விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், நாமக்கல்
கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. எஸ்.பி., யாதவ் கிரிஷ் அசோக் முன்னிலை
வகித்தார். கலெக்டர் மதுபாலன் தலைமை வகித்து பேசியதாவது:
சதுர்த்தி விழா, தெய்வீகத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, நமது
சுற்றுச்சூழலின் அழகையும், துாய்மையையும் பாதுகாப்பதற்கான நமது
உறுதிப்பாட்டை நிரூபிப்பதாகும். சுற்றுச்சூழலுக்கு உகந்த
விநாயகர் சிலைகள் மற்றும் அலங்கார பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை பயன்படுத்த கூடாது. சிலைகளை
அலங்கரிப்பதற்கு, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும்
பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் ரசாயன பொருட்கள் அல்லது சாயங்களை
பயன்படுத்த கூடாது.
ஒருமுறை உபயோகித்து துாக்கியெறியப்படும் பிளாஸ்டிக் மற்றும்
தெர்மாகோலாலான பூஜை பொருட்களை பயன்படுத்தக்கூடாது. பிரசாத
வினியோகத்திற்கு மட்கும் அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய
தட்டுகள் மற்றும் கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்த வேண்டும்.
மற்றும் கழிவுகளை பொது இடங்களில் வீசக்கூடாது. பொறுப்புடன்
குப்பைகளை பிரித்து அப்புறப்படுத்த வேண்டும். அறிவிக்கப்பட்ட
இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். அனுமதி இல்லாத நீர்
நிலைகளில், சிலைகளை கரைக்க கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
