Arts, culture, entertainment and media
ஐந்து நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த தீபாவளி முன்பதிவு டிக்கெட்டுகள்
திண்டுக்கல்: தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக, பணி நிமித்தமாக வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று துவங்கியது.
இதற்காக திண்டுக்கல் ரயில் நிலைய டிக்கெட் முன்பதிவு கவுண்டர் முன்பு நேற்று காலை முதலே ஏராளமானோர் திரண்டனர். முன்பதிவு துவங்கிய ஐந்து நிமிடங்களிலேயே சென்னை, பெங்களூரூ உள்ளிட்ட ஊர்களில் இருந்து திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வதற்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 20 பேர் மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடிந்தது. மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.