Politics
“யார் என்னை கொச்சைப்படுத்தினாலும், வரலாற்றை மாற்றவே முடியாது” - முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலி...

“திரும்பவும் சொல்றேன். ஒரு முதல்வருக்கான கண்ணியத்துடன் உங்கள் வார்த்தைகளும் உடல்மொழியும் இருக்க வேண்டும்” - முதலமைச்சர் விஜய்க்கு, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் பதிலடி!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் குறித்து கடந்த 7ஆம் தேதி முதலமைச்சர் விஜய் பதிலுரை கொடுத்தார். அப்போது திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த முதலமைச்சர் விஜய், மிசா கைதுகள் குறித்தும் பேசினார். அப்போது, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மிசாவில் கைதானதை குறித்து சைகை செய்து முதலமைச்சர் விஜய் பேசினார்.
அதற்கு கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல கட்சியினரும், அரசியல் தலைவர்களும் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், “என் செய்கை உள்நோக்கம் கொண்டதில்லை” என ட்விட்டர் மூலம் விளக்கமளித்தார் முதலமைச்சர் விஜய். இந்நிலையில் முதலமைச்சர் விஜயின் செய்கைக்கு, இன்று காணொளி மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
தனது வீடியோவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மிசா காலத்தில் தான் எதிர்கொண்ட இன்னல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், “எமர்ஜென்சி காலத்தில், மெரினா கடற்கரையில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி மிசாவிற்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தியவர், அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள். அதனாலேயே, அன்றைய ஒன்றிய அரசால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. திமுக ஆட்சி கலைக்கப்பட்ட மறுதினமே, என்னை கைது செய்ய என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது கலைஞர், ‘பையன் வீட்டில் இல்லை, பிரசாரத்திற்கு சென்றிருக்கிறான். நாளை வந்தவுடன் நானே ஃபோன் செய்கிறேன். வந்து கைது செய்து கொள்ளுங்கள்’ என்றார்.
