Arts, culture, entertainment and media
தீபாவளிக்கு சொந்த ஊர் பயணம் ரயில் முன்பதிவுக்கு நீண்ட வரிசை
திருப்பூர், செப். 6– தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று துவங்கிய நிலையில், திருப்பூர்
தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று துவங்கிய நிலையில், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன்பதிவு மையத்தில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
நடப்பாண்டு தீபாவளி பண்டிகை நவ. 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நவ. 3 மற்றும் 4ம் தேதி பயணத்துக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று துவங்கியது.
நவ. 5ம் தேதி பயணத்துக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது. தொடர்ந்து நவ. 6 மற்றும் 7ம் தேதி பயணத்துக்கான முன்பதிவும் அடுத்தடுத்த நாட்களில் திறக்கப்பட உள்ளது.
தொழில் நகரமான திருப்பூரில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி பலர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால், பண்டிகை நாட்களில் திருப்பூரில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
வழக்கமாக, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன்பதிவு கவுன்டர் காலை 8:00 மணிக்கு திறக்கப்படும். நேற்று முன்பதிவு மையம் திறப்பதற்கு முன்பே பயணிகள் பலர் வரிசையில் காத்திருந்தனர்.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போது தட்கல் டிக்கெட் முன்பதிவுக்காக வடமாநில பயணிகள் பலர் காத்திருக்கின்றனர். தீபாவளி பயணத்துக்கான முன்பதிவு தற்போது துவங்கியுள்ளதால், வரும் நாட்களில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வழக்கமாக, சேரன், நீலகிரி, நாகர்கோவில், இன்டர்சிட்டி மற்றும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களில் தீபாவளி நாட்களுக்கான டிக்கெட்டுகள் முன்கூட்டியே நிரம்பிவிடும். பண்டிகை காலத்தில் திருப்பூருக்கு வருவோர் எண்ணிக்கையை விட, இங்கிருந்து வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும்,’ என்றனர்.
தீபாவளிக்கு முந்தைய நாட்களில் பயணிக்க ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய,திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன்பதிவு மையம் முன்பு நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

