Politics
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்

சென்னை: குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இந்த அரசின் நிலைப்பாடு என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை, மூன்று நாட்கள் அரசு விடுமுறைக்கு பின், இன்று கூடியது. முதல்வர் விஜய் அளித்த பதிலுரை பின்வருமாறு: சாலைகள், ஆலைகள் அமைப்பதால் மாநிலத்தின் வளர்ச்சி தீர்மானிக்கப்படுவதில்லை; சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தொழில் முதலீடு வரும், தொழில்கள் முறையாக நடைபெறும். சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு காவல்துறை உற்ற நண்பராக இருக்க வேண்டும்.
இதுதான் அரசியலா?
நான் ஒன்றும் அவர்களுக்கு அட்வைஸ் செய்ய வரவில்லை. இதுதான் ரியாலிட்டி. இன்னொரு திமுக மூத்த உறுப்பினர் பேசும் போது, மக்கள் அவர்கள் கட்சிகளுக்கு ஓட்டு போடாத காரணத்தினால், மக்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராதாம். எனக்கு சத்தியமாக புரியவில்லை; கடந்த 50 வருடமாக இதே மக்கள் தான் அவர்களுக்கு ஓட்டு போட்டு கொண்டு இருந்தார்கள்.
அந்த கால அரசியலில் இருக்கும் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஏதுக்கு அவதூறாக, அசிங்கமான அரசியல், துருப்புடித்து போன அரசியல் நமக்கு ஏதுக்கு? நம்ம நண்பர்கள் எது பேசினாலும், நாங்கள் மிசாவை பார்த்தவர்கள் என்று சொல்கின்றனர். எல்லோருக்கும் மிசாவை பற்றிய வரலாறு தெரியும். நடந்தது, நடக்கிறது, நடக்க போவது எல்லாம் மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
இது தான் திமுக!
எம்ஜிஆர் பாடல்!
இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
ஆபாச நதி!
சட்டசபையில் முதல்வர் விஜய் வைத்த வேண்டுகோள்:
* கருத்துரிமை, பேச்சுரிமையை சரியான முறையில் எந்த அளவுக்கு உபயோகப்படுத்துகிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும். அரசியல் ரீதியாக என்ன வேண்டுமானாலும் கடுமையான விமர்சனங்ளை செய்து கொள்ளலாம். அதனை மக்கள் நேரலையில் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். யார் கருத்தை எடுத்து கொள்ள வேண்டும்.
எதனை விட்டுவிட வேண்டும் என்பதை மக்கள் பார்த்து கொள்வார்கள். அரசியலுக்கு தனிப்பட்ட முறையில் பெண்கள், மக்கள் மற்றும் யாரையும் தரம் தாழ்த்தி பேசுவது வேண்டாம். சமீப காலமாக தமிழகத்தில் ஆபாச நதியாக ஓடிக் கொண்டு இருக்கிறது. வன்ம நதியாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நதிகள் எல்லாவற்றையும் மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
அசிங்கமாக பேசினால்...
இதே சட்டசபையில் எதிர்க்கட்சியினரால் ஜெயலலிதா மேடம் ஒரு பெண்ணாக எவ்வளவு அவமானங்களை சந்தித்து இருக்கிறார்கள் என்பதை நாம் கேள்விப்படுகிறோம். வருங்காலத்தில் அது எல்லாம் எந்த பெண்களுக்கும் நடந்து விட கூடாது என்பது ரொம்ப தெளிவாக இருக்கிறேன்.
தங்களுக்கு பேச வாய்ப்பு கேட்டனர். அப்போது முதல்வர் எழுந்து, அவர்களுக்கு பேச வாய்ப்பு கொடுங்கள் என்று கூறினார். அதை ஏற்ற சபாநாயகர் பேசும் வாய்ப்பு தருவதாக கூறினார். இதையடுத்து திமுகவினர், எழுந்து அவரவர் இடங்களுக்கு சென்றனர். அப்போதும் திமுகவினர் சிலர் எழுந்து நின்று கூச்சல் போட்டுக் கொண்டே இருந்தனர்.
சபாநாயகருடன் வாக்குவாதம் செய்தபடி இருந்தனர். இதனால் சபாநாயகர், திமுகவினருக்கு வாய்ப்பு கிடையாது என்று கூறி, வனத்துறை அமைச்சரை பேச அழைத்தார். இதை தொடர்ந்து திமுகவினர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
பிரத்யேக வீடியோ!
சட்டசபையில் முதல்வர் விஜய் ஆவேச பேச்சு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு