Religion
ராமநாதபுரம் ஊருணியில் விநாயகர்சிலைகள் விசர்ஜனம் செய்ய ஏற்பாடு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இன்று (செப்.,16) மதியம் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தப்பட்டு நொச்சியூருணியில் சிலைகளை விசர்ஜனம் செய்வதற்காக பள்ளம் தோண்டி தண்ணீரை தேக்கி வைத்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஹிந்துமுன்னணி உள்ளட்ட ஹிந்து அமைப்பினர் நகர், புறநகர் பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரஷ்திடை செய்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். அவற்றை இன்று மதியம் வழிவிடுமுருகன் கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்சென்று நொச்சியூருணியில் விசர்ஜனம் செய்ய உள்ளனர்.
இவ்வாண்டு போதிய மழையின்றி ஊருணியில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. இதையடுத்து நகராட்சி சார்பில் ஊருணி நீர்பிடிப்பு பகுதியில் பெரிய அளவில் பள்ளம் தோண்டி ஒரே இடத்தில் குளம் போல தண்ணீரை தேக்கி வைத்து விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.––


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
