Politics
குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதி
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பதிவு...
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? என்று முதல்வர் விஜய்யிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவல்துறை, மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை விவாதங்களின் மீது முதல்வர் விஜய் இன்று பதிலுரை ஆற்றினார். அப்போது அவர் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
முதல்வரின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதிலளிக்க பேரவைத் தலைவர் மறுத்ததையடுத்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டு பின்னர் அவை வெளிநடப்பு செய்தனர். இன்று நாள் முழுவதும் பேரவையை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது.
இதையடுத்து உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில்,
"அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?
பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் CM. எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!" என்று பதிவிட்டுள்ளார்.
முதல்வர் விஜய்யின் பதிலற்ற பதிலுரையில் பழிபோடும் பேச்சும் திசைதிருப்பும் உத்திகளும் மட்டுமே இருந்ததாகவும் எந்த தயாரிப்பும் இன்றி சினிமா சூட்டிங் போல டயலாக் பேசியிருக்கிறார் என்றும் அடுத்த முறை சரியாக தயார் செய்து சிறப்பாக செய்ய முயற்சி செய்யுங்கள் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
à®à®®à®²à®¾à®à¯à®à®¤à¯à®¤à¯à®±à¯ à®à¯à®±à¯à®±à®à¯à®à®¾à®à¯à®à¯à®à®³à¯ பிரிணà¯à®à¯ à®à®µà¯à®à¯ à®à®à¯à®¤à¯à®¤à¯ வநà¯à®¤à¯ பà®à®¿à®à¯à® 3 நாà®à¯à®à®³à¯ à®à®¤à®±à¯à®à¯?
பதிலறà¯à®± பதிலà¯à®°à¯ - பழிபà¯à®à¯à®®à¯ பà¯à®à¯à®à¯ - diversion tactics - à®®à¯à®¤à¯à®¤à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®¨à¯à®¤ preparation-ம௠à®à®²à¯à®²à®¾à®®à®²à¯, Roll Camera, Action mode-ல௠Cringe à®à®¯à®²à®¾à®à¯ பà¯à®à®¿ à®à®°à¯à®à¯à®à®¿à®±à®¾à®°à¯ dummy CM.
à®à®¤à®¿à®°à¯à®à¯à®à®à¯à®à®¿à®¯à®¿à®©à¯ பதிலà¯à®à¯â¦
Why are three days needed to print out and read the allegations: Udhayanidhi asks cm vijay
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.