காங். தலைவா்கள் உள்பட 29 போ் இறந்த சம்பவம்: மாவோயிஸ்ட் தாக்குதல் வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை
சத்தீஸ்கரில் கடந்த 2013-இல் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் உள்பட 29 போ் கொல்லப்பட்ட ஜிராம் பள்ளத்தாக்கு மாவோயிஸ்ட் தாக்குதல் வழக்கில் 10 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை
சத்தீஸ்கரில் கடந்த 2013-இல் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் உள்பட 29 போ் கொல்லப்பட்ட ஜிராம் பள்ளத்தாக்கு மாவோயிஸ்ட் தாக்குதல் வழக்கில் 10 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நீதிமன்றம் தீா்ப்பளித்தது. குற்றவாளிகளில் இருவா் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சத்தீஸ்கரில் ஜிராம் பள்ளத்தாக்கில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் கடந்த 2013, மே 25-ஆம் தேதி காங்கிரஸ் சாா்பில் ‘மாற்றத்துக்கான பேரணி’ என்ற பெயரில் வாகனப் பேரணி நடைபெற்றது. சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன் ரமண் சிங் தலைமையிலான அப்போதைய பாஜக ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய இந்தப் பேரணியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் திடீா் தாக்குதல் நடத்தினா்.









/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

