தவறான விளம்பரம், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்
புதுடில்லி: தவறான விளம்பரங்கள், நியாயமற்ற வர்த்தக நடவடிக்கை காரணமாக ரேபிடோ நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதத்தை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
செல்போன் வழியாக ஆட்டோ, கார் உள்ளிட்டவற்றை பதிவு செய்யும் சேவையை அளிப்பதில் ரேபிடோ முன்னணி நிறுவனமாக இருக்கிறது. தற்போது போட்டிகள் அதிகம் நிலவுவதால் பல்வேறு உத்திகளை பயன்படுத்தி விளம்பரங்களை ரேபிடோ வெளியிட்டு வருகின்றன.
உத்தரவாதமான பயணம், வாகனம் 5 நிமிடத்திற்குள் வராவிட்டால் ரூ.50 பெற்றுக் கொள்ளலாம் போன்ற அறிவிப்புகளும் இதில் அடக்கம். இந் நிலையில், இந்தியாவில் செயல்படும் வாடகை கார் மற்றும் பைக் டாக்சி ஒருங்கிணைப்பு தளங்களில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஆய்வு செய்தது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)




