யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு வனத்தில் விறகு தேட தடைவிதிப்பு
வால்பாறை: எஸ்டேட் பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், வனத்தில் தொழிலாளர்கள் விறகுதேட செல்வதை தவிர்க்க வேண்டும் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வால்பாறை மலைப்பகுதியில் பருவ மழைக்கு பின் வனவளம் பசுமையாக இருப்பதால் நுாற்றுக்கணக்கான யானைகள், ைஹபாரஸ்ட், பன்னிமேடு, முருகாளி, புதுத்தோட்டம், சேலையாறு சிலுவைமேடு, நடுமலை உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட யானைகள், பகல் நேரத்தில் தண்ணீர் மற்றும் உணவு தேடி ரோட்டை கடக்கின்றன. சில எஸ்டேட் பகுதியில் தேயிலை காட்டிலும் பகல் நேரத்தில் முகாமிடுகின்றன.