"சீருடையில் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னால் குற்றமா?''-தூக்கியடிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ்-வெடிக்கும் விவாதம்
இந்தியாவில் அரசுப் பதவிகளில் இருப்பவர்கள் தங்களின் பொதுத் நிகழ்வுகளில் கடைப்பிடிக்க வேண்டிய நடுநிலைமை குறித்துப் பல விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி மாணவர்களுக்கு விடுத்த வாழ்த்துச் செய்தியில் இஸ்லாமிய வாழ்த்துச் சொற்களைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து அவர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது வழக்கமான நிர்வாக ரீதியிலான இடமாற்றம் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் வலதுசாரி அமைப்புகளின் அழுத்தம் இருப்பதாகக் கடுமையான விவாதங்கள் எழுந்துள்ளன.
பாஜக தலைமையிலான சுவேந்து அதிகாரி அரசு இயங்கி வரும் மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த செப்டம்பர் 14 அன்று ஒரு அதிரடி இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காரக்பூர் பகுதியின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த 2021 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி புஷ்ரா பானோ, அங்கிருந்து மாற்றப்பட்டு மாநில ஆயுதப் படையின் 4-வது பட்டாலியனின் துணை கமாண்டன்ட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பார்த்தா கோஷ் புதிய கூடுதல் எஸ்பியாகப் பொறுப்பேற்றுள்ளார்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)





