மலைவாழ் மக்களிடம் ரூ.1 கோடி லஞ்சம் - வனச்சரகர்கள் 3 பேர் உள்ளிட்ட 6 பேர் சஸ்பென்ட்
திருவண்ணாமலை ஜவ்வாதுமலை பகுதியில் வனநிலத்தை பட்டா போட்டு தருவதாகக் கூறி மலைவாழ் மக்களிடம் லஞ்சம் வசூலித்ததாக புகார். 6 வனத்துறையினர் சஸ்பெண்ட்.
திருவண்ணாமலை ஜவ்வாது மலையில் அரசுக்கு சொந்தமான காட்டு நிலத்தை தனி நபருக்கு பட்டா செய்து தருவதாக கூறி மலைவாழ் மக்களை மிரட்டி 1 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக 3 வனச்சரக அலுவலர்கள் உட்பட 6 பேர் சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கிழக்கு தொடர்ச்சி மலையில் சுமார் 262 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஜவ்வாது மலை பகுதி அமைந்துள்ளது, இந்த மலைப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் இலட்சக்கணக்கான மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த ஜவ்வாது மலையில் வாழும் மலைவாழ் மக்கள் சாமை, திணை, வரகு, தேன், பலாப்பழம் உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து அருகே உள்ள மாவட்டங்களுக்கு விற்பனை செய்து தங்களது வாழ்வாதாரத்தை வாழ்ந்து வருகின்றனர்.





/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)